சும்மா கெடந்தா

This content is also available in: English

பாடகர்கள்: பி. பானுமதி மற்றும்,டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து சும்மா கெடந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பானுமதி மற்றும்,டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .சும்மா கெடந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் சும்மா கெடந்தா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. பானுமதி மற்றும்
டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : ஓ….ஓ……ஓ…… ஓ…… ஓ…..
பெண் : ஓ….ஓ……ஓ…… ஓ…… ஓ…..

பெண் : {சும்மா கெடந்த
நெலத்த கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி} (2)
கம்மா கரைய ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில்
வாய்க்கால் வெட்டி

பெண் : சம்பா பயிரைப் பறிச்சு நட்டு
தகந்த முறையில் தண்ணீர் விட்டு
{நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு} (2)

பெண் : அட {காடு வெளைஞ்சென்ன
மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்} (2)

ஆண் : இப்போ காடு வெளையட்டும்
பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
காடு வெளையட்டும்
பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

ஆண் : {மண்ணைப் பொளந்து
சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி} (2)
{மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்} (2)

ஆண் : வழி காட்டி மரமான
தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம்
அவர் பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட காடு வெளைஞ்சென்ன
மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்

ஆண் : காடு வெளையட்டும்
பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

பெண் : மாடா ஒழைச்சவன்
வாழ்க்கையிலே
பசி வந்திட காரணம் என்ன மச்சான்
ஆண் : அவன் தேடிய செல்வங்கள்
வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு
இனி பண்ண வேண்டியது
என்ன மச்சான்
ஆண் : தினம் கஞ்சி கஞ்சி என்றால்
பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும்
துன்பங்களை இன்னும்
நீடிக்க செய்வது மோசமன்றோ
ஆண் : இருள் மூடி கிடந்த
மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : அட காடு வெளைஞ்சென்ன
மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்

ஆண் : நானே
போடப்போறேன் சட்டம்
பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

ஆண் மற்றும் பெண் :
{நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்} (2)

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

சும்மா கெடந்தா தேடல் சொற்கள்:
சும்மா கெடந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சும்மா கெடந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சும்மா கெடந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சும்மா கெடந்தா பாட்டு
சும்மா கெடந்தா ஐடியூன்ஸ், சும்மா கெடந்தா tamil2lyrics
நாடோடி மன்னன் சும்மா கெடந்தா
சும்மா கெடந்தா பாட்டு வரிகள்
சும்மா கெடந்தா படத்தின் பேர்
சும்மா கெடந்தா ரிங்டோன்
சும்மா கெடந்தா வரிகள்
பாடல் சும்மா கெடந்தா
சும்மா கெடந்தா