கருணை கடலே

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ ரிஷி

இந்த பாடலை பற்றி :
ராஜ ரிஷி படத்திலிருந்து கருணை கடலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கருணை கடலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ ரிஷி படத்தின் கருணை கடலே பாடலின் வரிகள்

ஆண் : போடா முனிவனே உனது பூர்வாங்கம்
பிழையாய் பேசுதே மனித ராஜாங்கம்
மேலென்றும் கீழென்றும் பிறவி ஏது
ஞாலத்தில் எனைப் போன்ற துறவி ஏது
மூவர்க்கும் தேவர்க்கும் அறிவென்ன குருடானதோ
ஆண் : புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்
ஆண் : புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
ஆண் : பிரம்மனொடு மறை தொழும் அரிஹரனும்
பிரம்ம ரிஷி இவனென அருளியதேன்
நித்தம் ஒரு தவமென பழகியவன்
சித்தம் ஒரு மெழுகென உருகுவதேன்
சுட்ட வடு எளிதினில் மறைந்திடுமோ
சத்திரியக் குலம் என்ன குறைந்ததுவோ
இத்தனையும் நடுங்கிட சபித்திடவோ
அத்தனையும் கருகிட அழித்திடவோ
தத்து கடல் அலை புரள கரைகள் கடந்திடவும்
அலைகள் உடைந்திடவும் சிதற
எட்டு திசை நிலம் அதிர மலைகள் பொடி படவும்
மரங்கள் இடி படவும் உதிர
இரவென்ன பகலென்ன மதி என்ன கதிரென்ன
சகலமும் உலகத்தில் மறையட்டுமே
முதலென்ன முடிவென்ன பிறப்பென்ன இறப்பென்ன
முனிவனின் தவ பலம் தெரியட்டுமே
சிவம் எது தவம் எது நெறி எது முறை எது
குலம் எது குணம் எது இனம் அது எது இனி மேல்
புவி மேல் ஜனனம் மரணம் வருமோ…
ஆண் : புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்
ஆண் : புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
ஆண் : ஆறாது ஆறாது என் கோபமே
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : தீராது தீராது என் தாபமே
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : அறம் கொன்ற புவி என்றும் சாக்காடுதான்
அனல் வந்து சூழ்கின்ற தீக்காடுதான்
நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக

ராஜ ரிஷி படத்தின் மற்ற பாடல்கள்

கருணை கடலே தேடல் சொற்கள்:
கருணை கடலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருணை கடலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருணை கடலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருணை கடலே பாட்டு
கருணை கடலே ஐடியூன்ஸ், கருணை கடலே tamil2lyrics
ராஜ ரிஷி கருணை கடலே
கருணை கடலே பாட்டு வரிகள்
கருணை கடலே படத்தின் பேர்
கருணை கடலே ரிங்டோன்
கருணை கடலே வரிகள்
பாடல் கருணை கடலே
இளையராஜா கருணை கடலே